Saturday, January 21, 2012

எளிதில் கிடைக்குமா ராமபக்தி?




எப்போதும் இந்த உலக வாழ்க்கையிலேயே 

திளைத்து ,கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என்று இவ்வுலகஇன்பங்களை நாடுவதிலேயே 
காலத்தை கழித்து அதுவே சிறந்ததென்று
நினைப்பவர்களின் மனதில் காரணமின்றி 
ராம பக்தி உண்டாகுமா? 

மனைவி ,மக்கள் ,உறவினர்கள், நண்பர்கள் 
சிறந்த வீடுகள், உடல்வலிமை ,பொன்,பொருள்
பணம் ,புகழ் போன்ற பலவிதமான வசதிகள் நிறைந்த
வாழ்க்கை இவற்றை நிலையற்றவை
என்றுவெறுக்கும் பாக்கியசாலிகளை
தவிரமற்றவர்களுக்கு எளிதில் 
கிடைக்குமா ராமபக்தி?

நல்லோரை தரிசித்து ,அவர்களை வணங்கி 
அவர்களின் அமுத மொழிகளுக்கு செவி சாய்த்து ,
அவர்களின் நல்லுறவை விரும்பி ,அனைத்தும் 
இறைவன் மயமென்று அறிந்து
 மனமார பூஜிப்பவர்களை தவிர 
மற்றவர்க்கு ராம பக்தி 
எளிதில் கிடைத்துவிடுமா? 

நம்மையெல்லாம் இவ்வுலகில் படைத்து
 நடமாடவிட்ட பிரம்மனால் 
துதிக்கபடுபவன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி

பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக 
ஆடம்பரத்துடன் பூஜைகளை செய்யாமல்
 மந்திரங்களுக்கெல்லாம் அரசனாக 
விளங்கும் ராம நாமத்தை தன நாவில் 
எப்போதும் இடைவிடாமல் உச்சரிக்கும் 
ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளை போன்ற
பாக்கியசாலிகளை தவிர மற்றவர்க்கு 
ராம பக்தி எளிதில் கிடைக்குமா? 

1 comment:

  1. பதிவை பார்வையிட்டு கருத்தை
    பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete