Thursday, January 5, 2012

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக 
என்று பாடினார் வள்ளலார் 

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

எல்லா உயிரும் துன்புற்று மடிக என்றும்
விரத நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் 
அகப்பட்டதை எல்லாம் கொன்று 
தின்று வயிற்றை நிரப்பும்
கூட்டம் பெருகிவிட்டது 
 
 இங்கு மட்டும் அல்ல இன்று உலகில் 
அனைத்து பகுதிகளிலும் இதே நிலைமை
 
இயற்கையில் எப்படி மனித மிருகங்கள் வாழ்வதற்கு உரிமை
உள்ளதோ அதேபோல் ஒவ்வொரு உயிரினத்திற்கும் 
வாழ உரிமை உண்டு என்பதை மனிதன் ஏற்றுகொள்வதில்லை 

பிற உயிர்களை கொன்று தின்னும் மனிதன்
இன்று தன் இனத்தை சார்ந்த மனித உயிர்களையே 
தன் சுயனலதிர்க்காக  ஈவு இரக்கமின்றி கொடூரமாக
கொன்று வருகின்றான்

அதனால்தான் இன்று இயற்க்கை தன் நிலை மீறி 
புயலையும், வெள்ளத்தையும், சுனாமியையும், 
தீ விபத்துகளையும் ஏற்படுத்தி மனித பதர்களுக்கு
புரிய வைக்க முயற்சி செய்து 
வருகிறது
ஆனால் மனிதன் அதை புரிந்து 
கொள்ளும்  நிலையில் இல்லை 
என்பது வேதனைக்குரியது
.
அனைவரும் அனைத்து
 உயிர்களையும் வாழ வைக்க 
இயற்க்கை அனைத்தையும்
இலவசமாக அபரிமிதமாக வழங்கியுள்ளது
 
அதை மனிதன் தடுக்க நினைத்தால் 
இயற்க்கை கொடுக்கும் தண்டனை 
இன்னும் மிக கடுமையாக இருக்குமென்பதை 
புரிந்து கொண்டு வள்ளலார் அறிவுரைப்படி 
தன் போக்கை மாற்றிக்கொண்டு அனைவரும்
நன்மை பெரும் வகையில் தன வாழ்வை 
அமைத்துக்கொள்ள வேண்டும் 

No comments:

Post a Comment