Wednesday, January 4, 2012

தன் பொறுப்புகளை நிறைவேற்றாமல் தட்டி கழிப்பவன் இறைவனை என்றும் அடையமுடியாது

கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளை தேடி அலைகின்றார் 
என்ற வரிகளை 
மறக்க முடியுமா?
ஆனால் இன்று என்ன நடக்கின்றது?
தன்னை நம்பி வந்த மனைவியையும்,
குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு 
வாழ்வில் பிரச்சினைகளை எதிர்கொள்ள 
பொறுமையும், மன உறுதியும் இல்லாது
குடும்பத்தை நிராதரவாக விட்டு விட்டு 
பொறுப்பற்ற நிலையில் சுற்றி கொண்டிருக்கிறது 
ஒரு கூட்டம் எல்லா ஊர்களிலும்
 
இல்லறமே நல்லறம் என்று 
அவ்வை மூதாட்டி அன்றே கூறியுள்ளாள் 
இல்லறத்தில் இருந்துகொண்டே
 தன் கடமைகளை செய்துகொண்டே 
இறைவழிபாடு செய்து அனேக மக்கள்
 இறைஅருளை பெற்றிருக்கிறார்கள்

தன் பொறுப்புகளை நிறைவேற்றாமல் 
தட்டி கழிப்பவன் இறைவனை
 என்றும் அடையமுடியாது  

No comments:

Post a Comment