Sunday, December 4, 2011

என்று மறையும் இந்த விரோத போக்கு?


என்று மறையும்  இந்த விரோத போக்கு?
முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் மீது பகைமை கொண்டு 
அவர்களை பழி தீர்ப்பதும் அதற்க்கு பதிலாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மீது பழி தீர்ப்பதும்
பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த மோதல் போக்கில் அழிவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்களும் அந்த நாட்டு வளங்களும்
 போரினால் பெரிதும் பாதிக்கபடுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமே 

இரு மதத்தினரும் இந்து மதத்தை இழிவுபடுத்துவதையும் மக்களின்
அறியாமையையும் ஏழ்மையையும்,ஒரு சிலரின் சுயநலத்தையும் 
பயன்படுத்தி மதம் மாற்றம் செய்வதையும் சமீப காலமாக 
அதிகரித்து வருவதும் அதனால் இந்திய நாட்டில் பல இடங்களில் 
சமூக  அமைதி குறைந்து வருவதையும் நாம் பார்க்கின்றோம் 

மதத்தின் பெயரால் இன்று மக்களிடையே ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையும் ,அவர்களின் மனதில் மிருக உணர்ச்சியை தூண்டிவரும் 
ஒரு சில விஷமிகள் ஒற்றுமையாய் வாழும் மக்கள் ஒருவொருக்கொருவர் 
அடித்துக்கொண்டு அழிவதற்கு வழி வகுப்பதும்  தினசரி நிகழ்வாகிவிட்டது 

கடவுள் நம்பிக்கையில்லா சீன அரசும் அஹிம்சையை போதிக்கும் புத்த மதத்தை சார்ந்த திபெத்தை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை கொடுமைபடுத்தியதால்  லட்சகணக்கில் அகதிகளாக வேறு நாடுகளில் அந்நாட்டு மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் 

இன்று அநேகமாக உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வெவ்வேறு இனங்களை சேர்ந்த தலைவர்கள் மற்ற இனங்களை கொன்று துன்புறுத்தி அழித்து இன்பம் காண்பது தொடர்கதையாகிவிட்டது 

விலங்குகளை போல் அறிவில்லாமல் ,ஒருவொருகொருவர் அன்பு 
பாராட்டாமல் சுயநலத்துடன் பிறரை கொடுமைபடுத்தி,பிறரை வஞ்சித்து 
வாழ்க்கை நடத்தவா இந்த உலகை இறைவன் படைத்தான்?

நாம் கேட்காமலேயே கோடிகணக்கான இன்பங்களை இறைவன் அள்ளி அள்ளி தந்தது மானிடம் முழுவதும் அன்போடு ஒருவொருகொருவர் உதவி செய்துகொண்டு மகிழ்வோடு வாழவே 

ஆனால் இங்கு நடப்பதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது
மனதில் இரக்கமுள்ளவன் உறங்கமுடியவில்லை 
உருக்கமுள்ளவன் இறைவன் திருவடிகளிடம் இந்நிலை மாற பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை 

அன்பர்களே அனைவரும் இந்நிலை மாற தினமும் காலையில் எழும்போது 
தீய சக்திகளின் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி பகைமையற்ற  பொழுதாக தினம் விடிய வேண்டும் என்று ஒரு கணம் இறைவனிடம் இந்த உலகிற்காக மன்றாடுங்கள்

அதில்தான் அனைவரும் நலமும் அடங்கியுள்ளது. 

3 comments:

  1. முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் மீது பகைமை கொண்டு
    அவர்களை பழி தீர்ப்பதும் அதற்க்கு பதிலாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மீது பழி தீர்ப்பதும்,

    How about other believers ...

    Tomorrow is December 6 - just a recall ...

    ReplyDelete
  2. Believers are not real believers .that is the problem.The real believers of god never hate others.never harm others .Such people are rare in this world.But the intolerant people won't allow them to survive.

    ReplyDelete