Thursday, December 8, 2011

நிலையற்ற உடலின் துணை கொண்டு நிலையான இறைஇன்பத்தை அடையத்தான் இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது

நமக்கு முடிவு நெருங்கிவிட்டது என 
உணர்த்த தலை முடி நரைக்கும்
ஆனால் அதை உணராது இன்று மக்கள்
நரை மயிருக்கு சாயம் பூசி 
முதுமைகோலத்தை மறைக்க 
பார்க்கிறார்கள் 
hair will die at any moment 
அழியபோகும் அந்த மயிருக்கு 
hair dye பூசுவதிலேயே பெரும் பணத்தை 
செலவழிக்கிறார்கள் 
இருந்தாலும் சில நாட்களுக்கு பிறகு சாயம் வெளுத்துவிடுகிறது 
ஒரு கால கட்டத்தில் ஒரு சாயமும் பயன்படுவதில்லை 
இன்னும் சிலர் தலை முழுவதும் வழுக்கை ஆகிய பின்னும்
விக் வைத்துகொண்டு திரிகின்றனர்
பணம் படைத்தவர்கள் மண்டையில் மயிர் முளைக்க 
பலவிதமான சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர்
மயிரை அறுவை சிகிச்சை மூலம் தலையில் நடும்
படலமும் அரங்கேறிகொண்டிருக்கிறது 
இப்படியாக உடலின் பழுதடைந்த ஒவ்வொரு 
பகுதியையும் சீர்படுத்த காலத்தையும் பணத்தையும் 
வாழ்நாள் முழுவதையும் வீணடிக்கின்றனர்
இவர்களை என்னவென்று சொல்வது?
பிறர் தம்மை மெச்ச வேண்டும் என்று இவர்கள்
இவ்வாறு செய்கின்றனர்
நிலையற்ற  உடலின் துணை கொண்டு நிலையான 
இறைஇன்பத்தை  அடையத்தான் 
இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது
என்று இவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசினால்
நம்மை பயித்தியக்காரர்கள் என்றும் ,
இவ்வுலக வாழ்க்கை எல்லா சுகங்களையும் 
அனுபவிப்பதற்கே என்றும் திமிராக பேசுகின்றனர்
ஆனால் வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களோ,
தீர்க்க முடியாத நோய்களோ,இழப்புகளோ 
ஏற்பட்ட பின்புதான் இவர்களுக்கு கடவுளை 
பற்றிய நினைப்பே வரும்
ஆனால் அப்போதும்கூட திருந்தாதவர் 
பலர் உண்டு. இவ்வுலகில் 


1 comment:

  1. "வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களோ,
    தீர்க்க முடியாத நோய்களோ,இழப்புகளோ
    ஏற்பட்ட பின்புதான் இவர்களுக்கு கடவுளை
    பற்றிய நினைப்பே வரும்"

    உண்மையான கருத்து.
    பகிர்விற்கு நன்றி சார்!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete