Sunday, December 25, 2011

காக்கும் கடவுளான நாராயணா இந்த மனித குலத்தை நீதான் காப்பாற்றவேண்டும்


காக்கும் கடவுளான நாராயணா இந்த மனித குலத்தை நீதான் காப்பாற்றவேண்டும் 

புராண காலத்தில் காக்கும் கடவுளான நாராயணன் மது,கைடபன் என்ற
அரக்கர்களை அழித்ததாக கூறப்பட்டுள்ளது

மக்களின் மதியை மயக்கி உடல்நலனை சீரழித்து வாழ்வை அழிக்கும் மதுவை
மதுவை உற்பத்தி செய்பவர்கள்,விற்பவர்கள் ஆகியவர்களை அழித்து தன படைப்புகளை காக்க இறைவன் அவதாரம் எடுதுள்ளதாகதான் இதை கருத வேண்டும்

இன்றும் அதே சூழ்நிலை தான் நீடிக்கின்றது

மதுவினால் இன்று கோடிகணக்கில் மக்களின் மதி மயங்கி
உடல் நோயுற்று துன்புறுகின்றனர்

கொள்ளை கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்
குடும்பத்தில் மனைவி குழந்தைகள், பெற்றோர் ஆகியோரை துன்புறுத்தி
அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுப்பதுடன்  குறைந்த ஆயுளிலேயே மாண்டு போகின்றனர்

இதனால் நாட்டில் ஆதரவற்ற,குழந்தைகள்,பெண்கள்,முதியோர் என சமுதாயத்தில் எண்ணிக்கை பெருகிவருகிறது

இந்த தீய செயலிலிருந்து மக்களை காக்க வேண்டிய அரசுகளே அதை தடுக்காமல் அவைகளே மதுவை தயாரித்து மக்களை குடிக்க வைத்து
தங்கள் சுயநல் நோக்கங்களுக்காக மக்களை பகடைகாய்களாக பயன்படுத்தி (கொள் )கொல்கின்றனர்

கடந்த காலத்தில் மகாத்மா காந்தி மதுவிற்கு எதிராக போராடிமக்களை
காப்பாற்றினார்.

தற்போது மீண்டும் இறைவன் நாராயணன் அனைவரின் வாழ்வை சிதைக்கும் மது என்ற அரக்கனை கொன்று மக்களை காக்க அவதாரம் எடுக்கவேண்டும் என்று முழுமனதுடன்பிரார்த்திப்போமாக 

No comments:

Post a Comment