Saturday, November 19, 2011

நமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம்

உயிரை ஆன்மா இயக்குகிறது
உயிர் உடல் எடுத்து மனதுடன் சேர்ந்துகொண்டு
ஒவ்வொரு பிறவியில் செய்த
நல்வினைகள் தீவினைகளுக்கு ஏற்ப
இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது
தெய்வங்களே மனித உடலில் வந்தால் கூட
இன்ப துன்பங்களை ஏற்று அனுபவித்தாக வேண்டும்
இதற்க்கு அவதாரங்களே சாட்சி
ஆனால் அவதாரங்கள் சாட்சியாக இருந்துகொண்டு
தன் ஆன்ம ஸ்வரூபத்தை அறிந்து கொண்டுள்ளதால்
இன்பதுன்பங்களினால் பாதிக்கபடுவதில்லை
ஆத்மா ஞானம் பெற்றவர்களும் பாதிக்கபடுவதில்லை
தான் ஆத்மாதான்,உடல் அல்ல என்று அறிந்துகொள்ளும்வரை
இந்த நிலை தொடரும்
ஞானம் பெறும்வரை இந்த உடலும் மனமும் கிரகங்களின்
கட்டுப்பாட்டில்தான் இருக்கும்
அதிலிருந்து விடுபடவேண்டுமென்றால் அமைதியாக
வினைகளை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்
நம் இதயம் உடலில் உயிர் உள்ள வரை விடாமல்
துடித்துகொண்டிருக்கிறது
அப்படி துடித்தாலும் ஒரு துடிப்புக்கும் மற்றொரு துடிப்புக்கும்
இடையில் அது ஒய்வு எடுத்துகொள்ளுகிறது
அதைபோல்தான் நாமும் இவ்வுலகில் வாழும்போதே
இன்ப துன்பங்களிலேயே முழுவதும் மூழ்கிவிடாமல்
இடையிடையே நம் மனதை இறைவனிடம் செலுத்தி வந்தால்
நமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment