Saturday, November 26, 2011

இறைவனை தேடி..


இறைவனை தேடி...
இறைநாமத்தை எந்நேரமும் பஜித்திடுவாய்
அவன் வடிவான சத்குருவின் வடிவத்தினை
மட்டும் தியானம் செய்திடுவாய்
(சுவாமி சச்சிதானந்தா -ஆனந்தாச்ரமம்)

இறைவன் எடுப்பான் வடிவங்கள் பலகோடி
பலன் எதிர்பாராது உன் கடமையை செய்தால்
நேரில் வந்து நின்றருள் செய்வான் உன் வாசல் தேடி
(பண்டரிநாதன்-பண்டரிபுரம்)

ஒன்றும் இயலா நிலையில் தன்னையே
நினைந்துருகும் பக்தனின் பாரத்தை
தன் தலையில் சுமந்து முதுகில்
பிரம்படியும்படுவான் அந்த பரம்பொருள்
(மதுரை சொக்கன்)

செல்வசெருக்கும் பொய்யுரைப்போரும்
தெய்வங்களானாலும் தேடினாலும்
கிடைக்கமாட்டான் அடிமுடி காண இயலா
ஜோதிவடிவான் எம்பெருமான்
(திருவண்ணாமலையான்)

1 comment: