Sunday, November 20, 2011

குழந்தைத்தனமாக நடந்துகொண்டால்

அழுதால் உன்னை பெறலாமே
என்று இறைவனை
பற்றி பாடினார் ஒரு பக்தர்
ஆம் திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி அழுதார்
உடனே அன்னை பார்வதி ஞானப்பால் அளித்தார்
உடனே கண்ணால் கண்ட இறைவனை பற்றி
பாடல்கள் வாக்கில் வந்தது
குழந்தை அழுதால் தாய் எங்கிருந்தாலும்
என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும்
குழந்தையின் அழுகுரல் கேடடு ஓடி
வந்து அணைத்துக்கொண்டு குழந்தையை
சாந்தபடுத்துகிறாள்
இவர்களுக்கு மட்டும் சாத்தியமான இந்த
அன்பு மற்றவர்களுக்கு ஏன் சாத்தியப்படவில்லை/
இதல் ஒன்றும் ரகசியமில்லை
மற்றவர்கள் இறைவனிடம் காட்டும் அன்பு
போலியானது
நாம் இறைவனிடம் காட்டும் அன்பு
குழந்தைகளின் களங்கமற்ற உள்ளம் போல்
தூய்மையானது அல்ல
நம் உள்ளங்களில் பொய்கள்தான் நிரம்பி வழிகிறது
அகந்தை சேற்றால் உள்ளத்தில்
இறைஅருள் நுழைவதற்கு சிறிது கூட இடமில்லை
நம் உள்ளம் இரும்புபோல் அன்பில்லாமல்
இறுகி பாறைபோல் உள்ளது
அதில் மற்ற உயிர்கள் மீது இரக்கமோ
,இறைவனை நினைத்து உருக்கமோ
இல்லாமல் சுயநலம் காரணமாக இறுக்கமாக உள்ளது
இறைவன் நமக்கு ஏமாற்றங்கள்,நோய்கள்,
துன்பங்கள்,சோகங்கள் என பல
சோதனைகளை தொடர்ந்து அளித்தாலும் நமக்கு ஆன்மீக விழிப்பு
ஏற்பட முடியாத அளவிற்கு உணர்வற்றவர்களாக் இருக்கிறோம்
என்ன செய்ய?
உள்ளத்தில் இறைவனிடம் முழுமையான சரணாகதி கிடையாது
இறைவனிடம் கொண்டுள்ள அவநம்பிக்கையே நம்
தோல்விகளுக்கு முழு காரணம்
குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருந்தால்
இறைஅருள் தானே நம்மை தேடி வரும்
குழந்தைத்தனமாக நடந்துகொண்டால்
மனதில் இருள்தான் நிறைந்திருக்கும்

No comments:

Post a Comment