Sunday, November 27, 2011

எவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு நாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்

பிறவி பெருங்கடல் நீந்துவர்
நீந்தார் இறைவனடி சேராதார்
என்றார் திருவள்ளுவர்.
மானிட பிறவி கிடைப்பது அரிதினும் அரிது
கிடைதற்க்கரிய பொருள் கிடைத்தால்
என்ன செய்ய வேண்டும்?
அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்
பாதுகாத்து அதை நல்ல முறையில்
பயன்படுத்தி பலன் பெற வேண்டும்
அவ்வாறு செய்யாமல் அதை பயன்படுத்தாமல்
வீணடித்தால் யாருக்கு நஷ்டம்?
அந்த பிறவியை அளித்த இறைவனுக்கு
நன்றி சொல்லவேண்டாமா?
அந்த பிறவியை நம் மீது கருணை கொண்டு
நமக்கு அளித்த இறைவனை பற்றி
அறிந்துகொள்ள வேண்டாமா?
அவ்வாறு செய்யாவிடில் இந்த பிறவியால் நமக்கு பயன் ஏது?
ஆனால் அதை விடுத்து நாம் இறைவனை மறந்து விடுகிறோம்
அவனை பற்றிய சிந்தையே இல்லாமல் அழியும்
இந்த உடல் மீது பற்று வைத்து
அதை பராமரிப்பதில் ஆயுள் முழுவதும்
செலவிட்டு முடிவில் மரித்து விடுகிறோம்
பிறகு அடுத்த மானிட பிறவி எப்போது கிடைக்கும்
என்று பலகாலம் என்று
ஏங்கி ஆவியாய் உழலுகிறோம்
இந்த நிலை நமக்கு தேவையா?
இதைபோல் எவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு
நாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து
பார்க்கவேண்டும்
எனவே கிடைத்த இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு
ஹரி மீது பக்தி செலுத்தி அவன் அருளை பெற்று
மாளா பிறவியிலிருந்து மீள அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்ளுவதே அறிவுடையோர் செய்யும் செயலாகும்

No comments:

Post a Comment