Saturday, November 19, 2011

நாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை?

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளார்
கடவுள் எல்லா உயிரிலும் கலந்துள்ளார்
இருந்தும் நாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை?
கடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆத்மாவாக
இருந்துகொண்டு அதை இயக்குகின்றான்
மின்விசிறி,மோட்டார் போன்றதுதான்
நம் உடலும் ஒரு இயந்திரம்
ஒரு இயந்திரம் பழுதில்லாமல் இருந்தால்
அதற்க்கு வேண்டிய சக்தியை
கொடுத்தால் இயங்க தொடங்கும்
அதை பயன்தரும் வகையில் இயங்க வைக்க
அல்லது நிறுத்த மற்றொரு சக்தி தேவைப்படும்
எல்லாம் இருந்தும் உடலில் உயிர் இல்லாவிட்டால்
உடல் இயங்காது .உயிர் இருந்தும் அதில் உள்ள ஆத்மா
என்ற இறைசக்தி இல்லாவிடில் அப்போதும் அந்த
உடலால் பயன் ஏதுமில்லை
ஆனால் இந்த உண்மையை யாரும் உணர்வதும் கிடையாது
உணர்ந்துகொள்ள முயற்சியும் மேற்கொள்ளுவது கிடையாது
உடல்தான் ஆத்மா என்று நினைத்துகொண்டு
அதை பராமரிப்பதிலேயே ஆயுள் முழுவதையும்
வீணடிக்கிறார்கள்
தாம் உடல் அல்ல ஆத்மாதான் என்ற உண்மையை
அறிந்துகொள்ள பல கோடி பேரில் சிலரே
முயர்ச்சி செய்து ஆன்ம ஞானம் பெறுகிறார்கள்
நாம் எதை பற்றி அதிகம் சிந்தனை செய்கிறோமா
நாம் அதுவாகவே ஆகிறோம் என்பது உண்மை
நாம் இறைவனை பற்றி சிந்திக்க தொடங்கினால்
நாம் அவனை பற்றி அறிந்துகொள்ள இயலும்
அறிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து
விடுபட்டு உண்மையானவிடுதலையை அடையமுடியும்
அவரவர்களுக்கு உள்ள கடமைகளை செய்துகொண்டே
மிகவும் எளிதான ராம நாமத்தை
உச்சரித்துக்கொண்டே இருப்பதுதான்

No comments:

Post a Comment