Tuesday, November 22, 2011

தமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க

தமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க
யாருக்கும் அதிகாரமில்லை
அவ்வாறு செய்தால் அது சாதகமாக முடிவதைவிட
பாதகமாகவே முடியும்
ராமாயணத்தில் தசரதன் ராமனை தன் மூத்த மகன்
என்று முடிவு செய்துகொண்டு அவனுக்கு மகுடம் சூட்ட
தீர்மானிக்கிறான்.
உண்மை என்னவெனில் பரம்பொருளான
ராமன் அவன் மனைவியான் கோசலையின் கற்பத்தில்உதித்ததால்
அவன் ராமனின் தந்தையாக இவ்வுலகோரால் அறியபட்டான்
ஆனால் ராமன் அவனின் மரபணுவில் உதித்தவன் அல்லவே
இந்நிலையில் அவனுக்கு ராமன் உரிமையில்லாதவன் ஆகின்றான்
அனைவரும் மகிழ்கின்றனர்
.ராமனுக்கு மகுடம் சூடும் வைபவத்தை ஆவலுடன்
எதிர்பார்கின்றனர் ஒருவரை தவிர.
அது கூனி என்ற மந்தரை என்று அனைவரும் அறிவர்
ராமாயணத்தை படிப்பவர்கள்
,ராமனை விரும்புபவர்கள் அனைவரும்
மந்தரையை திட்டி தீர்ப்பார்கள்
அதே போல்தான் கைகேயியும்
கோசலையை விட ,தன் மகன் பரதனை விட ராமனிடம்
அதிக அன்பு பாராட்டிய அவள் ஏன் அப்படி ஒரு கொடூரமான
தண்டனையை ராமனுக்கு கொடுத்தாள்?
இவ்வளவு நடந்தும் கோசலை ஏன் மெளனமாக இருந்தாள்?
முக்காலமுமறிந்த வஷிஸ்டர் போன்ற ரிஷிகள் ராமன்
வனம் செல்வதை அறிந்திருந்தும் மெளனமாக இருந்தது ஏன்?
இலக்குவனோ தன் நிலைமறந்து
வானுக்கும் மண்ணுக்குமோ அல்லவா குதித்தான்
இப்படி பல கதா பாத்திரங்கள் ராமாயணத்தில் உள்ளன
ராமன் பரம்பொருள் என்று
அறிந்தவர்கள் மெளனமாக இருந்தனர்
அறியாதவர்கள் அழுதனர், புலம்பினர்,
கைகேயியும்,பரதனையும் பழித்தனர்
தசரதன் துக்கத்திலேயே தன் உயிரை விட்டான்
பரம்பொருள் என்ன செய்யும்,எதை செய்யும்
என்று அதற்க்கு தான் தெரியும்
ஆனால் செய்வது எல்லாம் இந்த உலகமும்
அதன் மக்களும் மேன்மை பெறுவதற்கே
நாமும் ராமன் பாமர மனிதன் அல்ல
அவன் பரம்பொருள் என்று உணர்ந்து
அவனிடம் சரணாகதி செய்து நம் வாழ்ந்து வந்தால்
நம்மை அவன் அருள் நம்மை அரண்போல் நின்று காக்கும்

No comments:

Post a Comment