Sunday, November 20, 2011

ஆராயாது தவறு செய்தால் தண்டனை

ராமாயணம் என்ன தெரிவிக்கிறது ?
அரசனானாலும் ஆராயாது தவறு செய்தால் தண்டனை
அனுபவிக்கத்தான் வேண்டும் என்று தெரிவிக்கிறது.
தசரதன் ஆராயாது வெறும் ஒலியை மட்டும் கருத்தில் கொண்டு
பார்வையற்ற ஒரு வயோதிக தம்பதிகளின் ஒரே மகனை அம்பை விட்டு
கொன்றதற்கு அந்த தம்பதிகளின் மரணத்திற்கும்
சாபத்திற்கும் பின்னாளில் ஆளாக நேர்ந்து
தன் உயிருக்குயிரான ராமனை பிரிந்து
அந்த சோகத்திலேயே தன் உயிரை இழந்தான்
இதைபோல் ஏராளமான கருத்துக்களும் நீதிகளும்
ராமாயணத்தில் அடங்கியுள்ளான
அவைகளை கருத்தூன்றி படித்து நம் வாழ்வில்
அதை கடைபிடித்தால் துன்பங்கள்
நேராது தற்காத்துகொள்ளலாம்
பரப்ரம்மமே ராமனாக உருவெடுத்து வந்ததால்
தவறு செய்தவன் தந்தையாகினும் அவன்
தன் வினைபயனால் விளைந்த விதியை
அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதை
இதன் மூலம் புரிந்துகொள்ளவேண்டும்
நாம் அதர்ம வழியில் செல்லாமல்
ராம நாமத்தை உச்சரித்து
நமக்கு கிடைத்த வாழ்க்கையை
வாழ்ந்து வந்தால் நம்மை அரண் போல்
நின்று காப்பான் கோதண்டத்தை ஏந்திய ஸ்ரீராமன்

1 comment:

  1. நல்ல பதிவு. எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete