Monday, November 7, 2011


இன்று உலகில் மனிதர்கள் ஆசைகளின் பின்னே ஓடி முடிவில் நிம்மதியில்லா வாழ்க்கை வாழ்ந்து மடிகின்றனர். இன்று ஏழையும் நிம்மதியாக இல்லை பணக்காரனும் நிம்மதியாக இல்லை. உலக பொருட்களை தேடி ஓய்ந்த பின்னர் அமைதியை நாடி ஓடுகின்றனர். இவர்களை வைத்து காசு பண்ணும் போலி காஷாய வியாபாரிகளிடம் சிக்கி இருக்கின்ற பொருளையும் இழந்து புதிய சிக்கல்களில் மாட்டிகொண்டு தவிக்கின்றனர். இவைகளிலிருந்து தப்ப வேண்டுமானால் இறை நாமத்தை ஜபம் செய்யவேண்டும். பேராசையை விட்டொழிக்க வேண்டும். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொள்வதுபோல் செய்யாமல் தனக்கு உள்ள திறமைகளை கருத்த்தில் கொண்டு நேர்மையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.ஒழுக்கமாக வாழ பழகவேண்டும். நேரம்கிடைக்கும் போதெல்லாம் ராம நாமத்தை ஜபித்து வந்தால் நல்ல அமைதியான மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்

No comments:

Post a Comment