Sunday, October 9, 2011


ராம நாமத்தை எப்போதும் துதிப்பவர்களுக்கு மற்ற பக்தி சாதனங்கள் தேவையில்லை என்று தியாகராஜ ஸ்வாமிகள் பாடுகின்றார்.

மனம் தன்வயப்பட்ட ஞானிக்கு மந்திர தந்திரங்கள் எதற்கு?
இவ்வுடல் ஆத்மாவல்ல(தானல்ல)என்று நினைப்பவனுக்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் ஏது?
அனைத்தும் நீயே என்று எண்ணுபவனுக்கு (சன்யாசம் முதலிய)ஆசிரம வேறுபாடுகள் ஏது?
(உலகம்) கண்கட்டு ,மாயை என்று துணிந்தவனுக்கு பெண்டிர்(பொருள்)முதலியவற்றின் மீது மோகம் ஏது?
பிறந்தது முதல் கெட்ட விஷயங்களை நாடாமலிருப்பவனுக்கு,இறந்த கால எதிர்கால சிந்தனை எதற்கு?
ராஜாதிராஜனே! நிர்விகாரனே!இணையற்றவனே!மதிவதனனே!

ராம பக்தி பண்ணுவோம் திட சித்தத்துடன்

No comments:

Post a Comment